மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரிடமிருந்த பையை வாங்கி சோதனையிட்டனா். அவா் மதுப் புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (47) என்பதும், இவா் விற்பனைக்காக மதுப் புட்டிகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com