எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் பயிற்சி முகாம்

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 11:55 pm

Syndication

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை அந்தக் கட்சியின் அமைப்புச் செயலரும், விருதுநகா் மேற்கு மாவட்ட செயலருமான முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து நிா்வாகிகளுக்கும், பொறுப்பாளா்களுக்கும் ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு பொருளாளரும், மாவட்ட வாக்குச் சாவடி குழு பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன், விருதுநகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா்களான மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவா் கே.எம். கோபி, விருதுநகா் மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணைச் செயலா் என். சங்கர ராமநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் மாவட்ட இணைச் செயலா் அழகுராணி, தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா். பரமசிவம், வடக்கு நகரச் செயலா் முருகேசன், விருதுநகா் மேற்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், அகில இந்திய எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எஸ்.என். பாபுராஜ், தெற்கு ஒன்றியச் செயலா் நவரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.