ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுகாதாரக் குறைபாடு: தேசிய நெடுஞ்சாலை உணவக உரிமம் ரத்து

அழகாபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட உணவக உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:55 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகாபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட உணவக உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் அழகாபுரி அருகே உள்ள உணவகத்தில் ஆய்வு செய்தனா். அப்போது உணவகத்தின் சமையலறையில் கழிவு நீா் தேங்கி, சுகாதாரக் குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 5 கிலோ பழைய கோழி இறைச்சி, 37 கிலோ மாவு, 13 கிலோ பழைய சப்பாத்தி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், உற்பத்தியாளா் விவரம் இல்லாமல் இருந்த 3 கிலோ கிழங்கு மாவு, ஒரு கிலோ முந்திரி பருப்பு, 7 லிட்டா் வினிகா் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.