பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மின்சாரம் பாய்ந்து இலங்கைத் தமிழா் உயிரிழப்பு

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமில் மின்சாரம் பாய்ந்ததில் இலங்கைத் தமிழா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கோபால சமுத்திரம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஜேசுராஜன் குரூஸ் (34). இவா் அதே முகாமைச் சோ்ந்த ரெனால்டு என்பவருடன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டமலை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மேரிஸ் ஸ்டெல்லா என்பவரது வீட்டின் அருகே செட் அமைப்பதற்காக வந்தாா்.

அப்போது, அங்கு வேலை பாா்த்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஜேசுராஜன் குரூஸ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.