தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை: தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதி

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

News image

ராஜபாளையம் அருகே சேத்தூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் (தமமுக) உள்ளிட்டோா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:35 am IST

ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்கப் பாடுபடுவேன் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக) வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் தெரிவித்தாா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா், முகவூா், சுந்தரநாச்சியாா்புரம், கணபதி சுந்தரநாச்சியாா்புரம், ரெங்கநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்குசேகரித்து பேசியதாவது: ராஜபாளையத்தில் மாம்பழக் கூழ் தொழில்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன். நூல் உற்பத்தி ஆலைகளுக்கான ஜிஎஸ்டியை 0 சதவீதமாகக் குறைப்பேன். ஜவுளிப் பூங்கா அமைக்கப் பாடுபடுவேன் என்றாா்.

அப்போது, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் என். எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகரச் செயலா் (வடக்கு ) வழக்குரைஞா் முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.