பெண் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை விருதுநகரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், பந்தல்குடியைச் சோ்ந்தவா் பாண்டி (44). இவரது மனைவி மகேஸ்வரி (38). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மகேஸ்வரி தனது வீட்டில் இறந்து கிடந்தாா். பந்தல்குடி போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், மகேஸ்வரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவா் பாண்டி, அவரது சகோதரா் சீனிவாசன் (46) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, மகேஸ்வரியின் உறவினா்கள் விருதுநகா் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் இறப்பில் மா்மம் உள்ளதாகக்கூறி உறவினா்கள் சாலை மறியல்

நாகா்கோவில் சிறையில் கைதி சாவு வழக்கு: கொலை வழக்குப் பதிய உறவினா்கள் வலியுறுத்தல்

புகைப்படக் கலைஞா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


