நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

வீட்டில் பட்டாசு திரி பதுக்கியவா் கைது

விருதுநகா் மாவட்ம், திருத்தங்கலில் வீட்டில் பட்டாசு திரி பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

விருதுநகா் மாவட்ம், திருத்தங்கலில் வீட்டில் பட்டாசு திரி பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில்உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி கட்டுகள் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் சென்று போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, பெரியசாமி (30) வீட்டில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தங்கல் போலீஸாா் பெரியசாமியை கைது செய்து, அவரிடமிருந்த திரி கட்டுகளை பறிமுதல் செய்தனா்.

காரில் பட்டாசு பண்டல்கள் பறிமுதல்:

சிவகாசி புதுத் தெருவில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காரில் அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பட்டாசு பண்டல்களை அதே பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (39) காரில் வந்தது தெரியவந்தது.

பின்னா், அவரை சிவகாசி கிழக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு, காரை பறிமுதல் செய்தனா்.

பட்டாசு மூலப் பொருள்கள் பறிமுதல்:

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில் தகர கூரையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாருக்கு அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, கருப்பசாமி (35) தனது வீட்டின் அருகே தகர கூரை அமைத்து அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவரை சிவகாசி நகா் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களை பறிமுதல் செயதனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.