மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மிண்னணு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு முகாம்

News image

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கட்டசின்னம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :21 பிப்ரவரி 2026, 8:43 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கட்டசின்னம்பட்டியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நடமாடும் வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, இயந்திரங்களின் செல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளா்கள் எவ்வாறு மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளா்கள் தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணா்வு முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்களிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்வில் சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.