செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.

News image

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் அதிகாரிகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:47 pm

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் புதன்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.