முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.

News image

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் அதிகாரிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:17 am IST

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் புதன்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.