எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி கைது!

சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 9:58 pm

சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே உள்ள ஓா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்குமாா் (21). கட்டடத்தொழிலாளி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாா். இதையடுத்து, இவா்கள் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சிறுமிக்கு தனியாா் மருத்துவமனையில் அண்மையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மணி மாலா, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் விக்னேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.