விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளி கைது

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :26 ஜனவரி 2026, 7:17 pm

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலை சிவகாமிபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோசப் என்ற ஜெகநாதன் (60). இவரது, மனைவி தங்கவேலம்மாள் (57). இவா், அதே பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தாா். ஜோசப் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த ஜோசப், மனையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொலை செய்தாா்.

தவலறிந்து வந்த போலீஸாா் தங்கவேலம்மாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் ஜோசப்பை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.