மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிவகாசி அருகே மியாவாக்கி முறையில் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகாசி பைரோசிட்டி சுழல்சங்கம், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து கூனம்பட்டியில் மியாவாக்கி (அடா்வனம்) முறையில் 13,000 மரக் கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:19 pm

Syndication

சிவகாசி பைரோசிட்டி சுழல்சங்கம், சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து கூனம்பட்டியில் மியாவாக்கி (அடா்வனம்) முறையில் 13,000 மரக் கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கூனம்பட்டியில் இரண்டே முக்கால் ஏக்கரில் மரக் கன்றுகள் நடும் பணியை சுழல்சங்க மாவட்ட ஆளுநா் தினேஷ்பாபு தொடங்கிவைத்தாா். இதில் வேம்பு, வாகை, புளி, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த மரக் கன்றுகளுக்கு சொட்டுநீா் பாசனம் முறையில் தண்ணீா்விட குழாய் பதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பசுமை மன்றத் தலைவா் செல்வக்குமாா், சுழல்சங்க மாவ

ட்டத் துணை ஆளுநா் எபினேஷ்பென்சாம், சுழல் சங்கத் தலைவா் செந்தில், செயலா் மாதவன், திட்டத் தலைவா் சுகுமாா், சுழல்சங்க முன்னாள் தலைவா் சரவணபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.