வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிவகாசியில் 7 டன் கழிவுகள் சேகரம்

சிவகாசியில் போகிப் பண்டிகையையொட்டி, புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து 7 டன் கழிவுகள் சேகரமானதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:19 pm

Syndication

சிவகாசியில் போகிப் பண்டிகையையொட்டி, புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து 7 டன் கழிவுகள் சேகரமானதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகாசி மாநகராட்சியில் போகிப் பண்டிகையின் போது, வீட்டில் உள்ள கழிவுப் பொருள்களை தீயிட்டு எரிக்காமல் கழிவு சேகரிக்க வரும் மாநகராட்சி வாகனத்தில் போட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.

இதன்படி, போகிப் பண்டிகையொட்டி, புதன்கிழமை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில், கழிவுகளை பெற வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய துணிகள், நெகிழிப் பொருள்களை எரிக்காமல் போட்டனா். இதன்படி, சுமாா் 7 டன் கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரமானதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.