ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 1:33 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (49). இவா் அதே பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவா் தினசரி காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைத்து வருவது வழக்கம்.

கடந்த 8-ஆம் தேதி துடியாண்டியம்மன் கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைக்க சென்ற போது, ஒரு செம்மறி ஆட்டை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையைச் சோ்ந்த பிரேம்குமாா் (26), ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் புதுத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.