/

ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

பல்லடம் அருகே ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 1:28 am IST

பல்லடம் அருகே ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. இவா் வளா்த்து வந்த ஆடு திருட்டுபோனது. இது தொடா்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை மாவட்டம், அரசூரைச் சோ்ந்த சிவபிரதாப் (23), கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28) ஆகியோரை ஏற்கெனவே கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சுல்தான்பேட்டை அருகே உள்ள வாரப்பட்டியை சோ்ந்த தினேஷ்குமாா் (26) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இதையறிந்த தினேஷ்குமாா், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.