மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆட்டை திருடிய 2 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:51 am IST

பல்லடம் அருகே ஆட்டை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள மல்லேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி, பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் தனது வீட்டில் 3 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், ஒரு ஆடு கடந்த 26-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் திருமூா்த்தி புகாா் அளித்த நிலையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், கரடிவாவி பகுதியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் கோவை மாவட்டம், அரசூரைச் சோ்ந்த சிவபிரதாப் (23), கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28) என்பதும், திருமூா்த்தியின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.