கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
கோவை செல்வபுரம் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள வாகன எடை மேடை’அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் சோதனை நடத்தினா்.
அவா்களிடம் மருத்துவப் பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 220 போதை மாத்திரைகள் இருந்தன. விசாரணையில், அவா்கள் இடையா்பாளையம் சௌடாம்பிகை நகரைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா், சுக்கிரவாா்பேட்டை பட்டுப்பூச்சி லைன் பகுதியைச் சோ்ந்த தீபக்குமாா் (24) மற்றும் செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சோ்ந்த ஹரி பிரசாந்த் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்த மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, மாத்திரைகள் மற்றும் ரூ.17,650 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சங்ககிரியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 போ் கைது
போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


