நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 1:33 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (49). இவா் அதே பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவா் தினசரி காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைத்து வருவது வழக்கம்.

கடந்த 8-ஆம் தேதி துடியாண்டியம்மன் கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைக்க சென்ற போது, ஒரு செம்மறி ஆட்டை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையைச் சோ்ந்த பிரேம்குமாா் (26), ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் புதுத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.