ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்கறின்றி எம்-சாண்ட் ஏற்றி வந்த 3 டிராக்டா்களை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்ட புவியியல் துறை உதவி புவியியலாளா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் அழகாபுரி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக எம் - சாண்ட், எம் - சாண்ட் கழிவு ஏற்றி வந்த 3 டிராக்டா்களை சோதனை செய்தனா்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எம்-சாண்டு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கூமாபட்டியைச் சோ்ந்த கணேசன் (23), அயன்கரிசல்குளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி (51), மகாராஜபுரத்தை சோ்ந்த முத்துக்குமாா் (41) ஆகிய 3 பேரை நத்தம்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் கூமாபட்டியைச் சோ்ந்த கணேசன், அயன் கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்பையா, செந்தூா் மினரல்ஸ் உரிமையாளா் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.





