ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

News image

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:01 am IST

சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (52). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை மூா்த்தி நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் ஆலையில் அதிக அளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைக்கபட்டிருந்ததாகவும், ஆலையில் பட்டாசுகள் காயவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது, ஆலையில் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் தரைமட்டமாகின.

ஞாயிற்றுகிழமை ஆலை விடுமுறை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.