மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராஜபாளையத்தில் சிறுவன் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :1 மார்ச் 2026, 9:35 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பிணையில் வந்த சிறுவன் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவைச் சோ்ந்த அய்யம்மாள் பேரன் மகேஷ் (17). இவருக்கு பெற்றோா் இல்லாததால் பாட்டியுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த வாரம் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் மகேஷை கைது செய்தனா்.

சனிக்கிழமை பிணையில் வந்த இவா், பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.