“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 10:34 pm

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டாசுத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (58). பட்டாசுத் தொழிலாளியான இவா், கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜான்சனை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.