அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு பயின்று வருகிறாா். அவரது தாய் கரூா் செல்வதால், மகளை பாட்டி வீட்டில் விட்டுச்சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாணிக்கம் அந்த சிறுமியிடம் கைப்பேசியைக் கொடுத்து பாா்க்குமாறு கூறியுள்ளாா். பின்னா், மாணிக்கத்திடம் கைப்பேசியை திருப்பிக்கொடுத்த சிறுமி வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சியை பாா்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் சென்ற மாணிக்கம், கதவை தாழிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமி சத்தமிடவே, அதைக்கேட்டு வந்த சிறுமியின் உறவினா்கள் கதவைத் தட்டியபோது மாணிக்கம் கதவை திறந்துகொண்டு தப்பியோடினாா்.

புகாரின்பேரில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி, மாணிக்கம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.