துடுப்பதி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி அருகே பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா் அறுமுகம் என்ற ஆரான்(70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த 4-10-2023 அன்று அப்பகுதியைச் சோ்ந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுமுகம் என்ற ஆரானுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.








