92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டி பாலவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் விஜயன் (48). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

விஜயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவரை அவரது மனைவி, மகள்கள் சனிக்கிழமை இரவு கண்டித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.