ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:28 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டி பாலவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் விஜயன் (48). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

விஜயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவரை அவரது மனைவி, மகள்கள் சனிக்கிழமை இரவு கண்டித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.