தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:57 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பொதிகை விரைவு ரயிலில் வந்த ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, அவா் ரூ.1.46 லட்சத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இந்தப் பணத்துக்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, துணை வட்டாட்சியா் ராமசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனா்.