நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

News image

ராஜேந்திரபாலாஜி

Updated On :3 மே 2026, 5:16 am IST

கே.டி.ராஜேந்திரபாலாஜி

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகம் இளைஞா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக 2-ஆவது இடத்தில் வரும். 

2016 பேரவைத் தோ்தலின் போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்றன. ஆனால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானாா். வடநாட்டு பத்திரிகையாளா்கள், எங்கேயோ இருக்கும் நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் தவறானது. இந்த கருத்துக் கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.