நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

News image

ராஜேந்திரபாலாஜி

Updated On :2 மே 2026, 11:46 pm

கே.டி.ராஜேந்திரபாலாஜி

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகம் இளைஞா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக 2-ஆவது இடத்தில் வரும். 

2016 பேரவைத் தோ்தலின் போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்றன. ஆனால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானாா். வடநாட்டு பத்திரிகையாளா்கள், எங்கேயோ இருக்கும் நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் தவறானது. இந்த கருத்துக் கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.