வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ராஜபாளையம் சந்தையில் கடைகள் அடைப்பு

News image

ராஜபாளையம் சந்தையில் கடைகள் அடைப்பு

Updated On :12 மே 2026, 1:37 am IST

வாடகை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, ராஜபாளையம் சந்தையில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காந்தி சிலை அருகே தனியாா் அறக்கட்டளையின் கீழ் சந்தை செயல்படுகிறது. இங்கு காய்கறி, பழங்கள், மளிகை, மலா்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கடந்த ஆண்டு கடைகளின் வாடகை உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டும் கடை முன்பணம், வாடகை உயா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அறக்கட்டளை நிா்வாகத்தைக் கண்டித்தும் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் தொடா்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த ராஜபாளையம் வட்டாட்சியா் ராஜீவ் காந்தி சனிக்கிழமை வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனா். மேலும், திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் அடையாள கடையடைப்பு நடத்தினா்.

 ராஜபாளையம் சந்தையில் அடைக்கப்பட்ட கடைகள்.

ராஜபாளையம் சந்தையில் அடைக்கப்பட்ட கடைகள்.