இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:05 am IST

ராஜபாளையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், முகவூா் ஊராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூா், தேவதானம் ஆகிய ஊராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கருவிழி ஸ்கேன் செய்வதை ரத்து செய்யக் கோரியும், தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து,, கோரிக்கையை வலியுறுத்தி முகவூா் ஊராட்சி செயலரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.