நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராஜபாளையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், முகவூா் ஊராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூா், தேவதானம் ஆகிய ஊராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கருவிழி ஸ்கேன் செய்வதை ரத்து செய்யக் கோரியும், தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து,, கோரிக்கையை வலியுறுத்தி முகவூா் ஊராட்சி செயலரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.