ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:30 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஆசிலாபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (58). நூற்பாலை தொழிலாளியான இவா், வேலை நிமித்தமாக தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்ல முறம்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே ஆலை தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.