மது அருந்துபவர்கள் சில ஆண்டுகளிலேயே நோய் வாய்ப்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் பெரும்பாலும் சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று யாராவது கணக்குப் பார்த்தார்களா? குடித்துவிட்டுத் தகராறு செய்வது, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதனால் ஏற்படும் விபத்துகள், பாதிப்புகள், குடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் சுற்றித் திரிவது, அதனால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பு இப்படி எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால் அரசுக்கும் சரி, நாட்டுக்கும் சரி, மக்களுக்கும் சரி மதுக்கடைகளினால் ஒரு நன்மையும் இல்லை, லாபமும் இல்லை.