கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இப்படியும் கீரையைச் சமைக்கலாம்!

முளைக் கீரையை உப்புப்போட்டு வேகவைத்து தேங்காய், பச்சைமிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி

News image
Updated On :2 நவம்பர் 2014, 5:37 am

கீதா ஹரிஹரன்

* முளைக் கீரையை உப்புப்போட்டு வேகவைத்து தேங்காய், பச்சைமிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர்விட்டு, கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி தயார். இது மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

* கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுத்தம் பருப்புக்குப் பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

* கீரைத்தண்டுகள் மிச்சம் வந்துவிட்டதா? அதைத் கொண்டு சுவையான காய்கறி சூப் தயாரிக்கலாம்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிதளவு வெல்லத்தூள் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையும் கூடும்.

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை உப்பு சேர்த்து அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சிறிது கூட கசக்காது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்.

* கீரைவகைகளை வதக்குவதை விட கூட்டாக சமைப்பதில் வைட்டமின் சத்துக்கள் வீணாவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.