கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கண்ணாடிப் பொருட்கள் பளபளக்க!

கண்ணாடியிஸ் உள்ள கறைகளைப் போக்க ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது நம் வழக்கம். இப்படித் துடைத்த பிறகும் கறைகள் கண்ணுக்குத் தெரியும்.

News image
Updated On :10 மே 2015, 10:39 am

கீதா ஹரிஹரன்

கண்ணாடியிஸ் உள்ள கறைகளைப் போக்க ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது நம் வழக்கம். இப்படித் துடைத்த பிறகும் கறைகள் கண்ணுக்குத் தெரியும். ஈரமான துணிக்குப் பதிலாக செய்தித்தாள்களை பயன்படுத்திப் பாருங்கள். கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படும். அதன் பிறகு காய்ந்த துணியை வைத்துத் துடைத்தால் மற்ற கறைகளும் அகலும். கண்ணாடியும் பளிச்சென்று ஆகிவிடும்.

ஜன்னல் கதவின் கண்ணாடிகள், அலமாரிக் கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் மங்கலாக இருந்தால் சுண்ணாம்பை நீர்விட்டு நன்றாகக் குழைத்துத் தடவி சிறிது நேரமானாதும், தூய்மையான வெள்ளைத் துணியால் நன்றாகத் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

ஜன்னல் கண்ணாடி, புகைப்படம் உள்ள கண்ணாடி ப்ரேம், கண்ணாடி போடப்பட்ட படங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்ய சாதாரணத் துணியை பயன்படுத்துவதைவிட பனியன் துணி போன்ற மென்மையான துணியே ஏற்றதாகும். இதனால் கண்ணாடி சுத்தமாவதோடு கீறல் விழாமலும் இருக்கும்.

கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசினால் கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். வாடை போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.