""அதுமட்டுமல்ல, என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் மத்திய அரசின் பள்ளிப் பாடநூல்களை அடிப்படையாக வைத்துத்தான் ஐஏஎஸ் தேர்வுகளின் கேள்விகள் அமைக்கப்படுகின்றன. எனவே அந்த பாடப்புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறோம். இந்தப் புத்தகங்களைப் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு தயக்கமில்லாமல் தமிழில் பதில் எழுத முடியும். தமிழில் எழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியுமா? என்று மாணவர்கள் இனி பயப்படத் தேவையில்லை. அப்படித் தேர்வு எழுதி ஆர்.பாலகிருஷ்ணன், ராஜேந்திர சோழன், நந்தகுமார், கோபால், ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்'' என்கிறார் வீரபாபு.