/

நானும் இசைப்பேன்

எழுத்தாளர்  புதுமைப்பித்தன்  ராயப்பேட்டை  நெடுஞ்சாலையில்  வசித்து வந்தார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2019, 8:54 am


எழுத்தாளர்  புதுமைப்பித்தன்  ராயப்பேட்டை  நெடுஞ்சாலையில்  வசித்து வந்தார்.  அவரது வீட்டில்  தவில், நாதஸ்வரம்  போன்ற இசைக்கருவிகள் இருந்தன.  அதைப் பார்த்த  அவரது நண்பர்களில் ஒருவர்,  ""இந்த கருவிகள் எல்லாம்  உங்களுக்கு எதற்கு? நீங்கள்  ஒரு எழுத்தாளர் தானே''  என கேட்டார். 

அதற்கு  புதுமைப்பித்தன்,  ""நான் நாதஸ்வரம்  வாசிப்பதற்காகவே வாங்கி வைத்துள்ளேன்.  மேலும்,  ராஜரத்தினம் பிள்ளை  எனக்குப் போட்டியாக  கட்டுரை எழுதும்போது,  நான் ஏன் நாதஸ்வரம்  வாசிக்கக் கூடாது''  என்று நகைச்சுவையாக  விளக்கம்  அளித்தார்.  இதனைக்கேட்ட  நண்பர் புதுமைப்பித்தனின் பேச்சில், இழைந்தோடிய  நகைச்சுவையை  ரசித்து மகிழ்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.