

ரேமா ராஜேஸ்வரி .. தெலுங்கானா மாநிலத்தில் எஸ்.பி.யாக ஒரு பகுதியில் நியமிக்கப்பட்டபோது, அங்கு குழந்தை கடத்தல் மற்றும் பல விஷயங்கள் பற்றி ஏகமாய் வதந்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவுவதை கண்டார். உடனே தன்னையும், "வாட்ஸ் அப்' குழுவில் இணைத்துக் கொண்டு, தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மேலும் உங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி, புதிய நபரைக் கண்டால், உடனே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாறாக போலீஸூக்கு தெரிவியுங்கள் என திரும்பத்திரும்ப தகவல் பரப்பினார். பலன் இவர் சார்ந்த 400 கிராமங்களில், போலி செய்திகளால் நடந்த மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.