தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கிறிஸ்துமஸ் மரம் உருவான வரலாறு...

கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, குடில், மரங்கள்தான்.

News image

கிறிஸ்துமஸ் மரம்

Updated On :30 நவம்பர் 2024, 6:30 pm

கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, குடில், மரங்கள்தான். பண்டிகை கொண்டாடுவோரின் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு,அதில் வண்ண விளக்குகளையும் பரிசுப் பொருள்களையும் தொங்கவிடுவது வழக்கம்.

கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், பண்டிகையின்போது இந்த மரத்தைப் பயன்படுத்தியதால் இந்த மரம் தற்போது 'கிறிஸ்துமஸ் மரம்' என்றே அழைக்கப்படுகிறது.

'பெர்' மரங்களை கிறிஸ்துமஸூடன் இணைத்து கொண்டாடிய புகழ் ஜெர்மானியரை சாரும். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் போனியாஸ் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் ஜெர்மனிக்கு இறைச்சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ஒரு பெர் மரத்தை ஆசிர்வதித்து, குழந்தை இயேசுவுக்கு அதை ஒப்புக் கொடுத்தார்.

அதுமுதல் பெர் மரம் கிறிஸ்துமஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போதும் இந்த மரம் வீடுகளில் நடப்பட்டது. இதன்பின்னர், ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும், இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

1841-இல் ஆல்பர்ட் இங்கிலாந்து அரண்மனையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருள்களைக் கட்டி தொங்கவிட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகளை எரிய வைத்தார். பின்னர், இந்தப் பரிசுப் பொருள்களைப் பலருக்கும் வழங்கினார்.

இதன்பின்னர், கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.