அண்மைக்காலங்களில் பெண்கள் பொது வாழ்வில் அதிகமாகக் காணப்படுகின்றனர். அரசு அலுவலர்களாக, விளையாட்டு வீரர்களாக, அரசியலில், பன்னாட்டு நிறுவனங்களில் பல துறைகளில் இன்றைக்கு பெண்கள் சாதிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது உயர்பதவியில் பெண்கள் பணியாற்றி பெருமை சேர்க்கின்றனர்.
இன்று பணிபுரியும் இடங்களில் நால்வரில் ஒருவர் பெண். ஆரம்ப சுகாதாரப் பணிகளில் வேலை செய்பவர்களில் 4 பேரில் 3 பேர் பெண்கள். மருத்துவ ஆய்வு, வங்கித் துறை, தகவல் தொழில்நுட்பம், பட்டயக் கணக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்... இப்படி பெண்களின் சாதனைகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
உயர்பதவியில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் நிலை இப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உருவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.ஷிஹ்னாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜீவா, மகளிர்த் திட்ட இயக்குநர் அ.லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர் கா.கார்த்திகா என ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது உயர்பதவியில் உள்ளனர்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய நிர்வாகத் துறைகளில் பெண்கள் தங்களது திறமை, கல்வி, அர்ப்பணிப்பு, தலைமைத்துவத்தால் உயர்ந்த இடங்களை அடைந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவது ஒரு சமூகப் புரட்சியின் வெளிப்பாடாகும்.
தொடர்புடையது

திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்







