விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கத்திகளின் வனம்

மடகாஸ்கரில் அமைந்துள்ள கினிவஸ் வனம் சவரக்கத்தி போன்ற கூர்மையான சுண்ணாம்பு ஊசிப் பாறைகளால் ஆனது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

மடகாஸ்கரில் அமைந்துள்ள கினிவஸ் வனம் சவரக்கத்தி போன்ற கூர்மையான சுண்ணாம்பு ஊசிப் பாறைகளால் ஆனது. கரடுமுரடான இந்த வனத்தில், மனிதர்களால் வெறும் காலுடன் நடக்க முடியாது. அபாயகரமான, அதிக பாறை சிகரங்களைக் கொண்ட இந்தத் தீவு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியைக் கொண்டது.

இந்தப் பகுதி சுண்ணாம்புப் பாறைகள், அரிப்பு, வானிலை சிதைவுகளால் செதுக்கப்பட்டு மாயத் தோற்றத்தையும் வேறொரு உலகத்தையும் சார்ந்தது போன்ற நிலப் பரப்பை உருவாக்கியுள்ளன. வானுயர்ந்த சிகரங்கள், கூர்மையான விளிம்புகளைக் கொண்ட செங்குத்தான பாறைகள், சிக்கலான குகைகள் என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரு கற்பனை உலகத்திலிருந்து நேராக வந்தவாறு வியப்பை அளிக்கும் காட்சிகளை அளிக்கிறது.

பூமியில் வேறு எங்கும் காணப்படாத தாவரங்கள், உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. கத்தி காட்டில் மிகவும் வசீகரிக்கும் ஓர் அம்சமான ஒளி, நிழல்களின் நடனம் உள்ளது.

குறுகிய இடைவெளிகள், பிளவுகள் வழியாக ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது அவை நிலப்பரப்பை ஒளிரச் செய்து, சிக்கலான கோலங்களை உருவாக்குகின்றன.

இந்த வனம் வழியாக பயணிப்பதே சுகம்தான். வளைந்து நெளிந்த பாறைகள், குறுகிய பள்ளத்தாக்குகள், மறைந்திருக்கும் குகைகள், ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய காட்சியை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கும். மலை ஏறுபவர்களுக்கு 'த்ரில்' பயணம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.