'கராத்தே, நடனப் போட்டிகளில் உலக அளவில் வென்று சாதனைகளைப் படைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்' என்கிறார் மோ.ரோஷன்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள கீழ்க்கொடுங்காலூர்
கிராமத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கே.மோகன் - சுதா தம்பதியின் மகன் மோ.ரோஷன். இவர் கடைசிகுளத்தில் உள்ளசுவாமி அபேனநந்தா
வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுவரும் அவரிடம் பேசியபோது:
'சிறுவயதிலேயே கராத்தே பயிற்சியில் சேர்ந்தேன். கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோதும், நேரத்தை வீணாக்காமல் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டேன். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
திண்டிவனத்தில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஹிக்வானா ஹிட்டோரியோ கராத்தே போட்டியில் முதலிடத்தைப் பெற்று, ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி. ஜவஹர்லாலிடம் பரிசு பெற்றேன்.
தொடர்ந்து கராத்தே பயிற்சி பெற்று, பிளாக் பெல்ட் பெற விரும்புகிறேன். கராத்தே போட்டிகளில் பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நடனத்திலும் ஆர்வம்
உள்ளதால், அந்தப் பயிற்சியையும் மேற்கொள்கிறேன். எதிர்காலத்தில் மென்பொருள், செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் படித்து, சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்கிறார் ரோஷன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!
நம்பிக்கை நட்சத்திரம்

மாநில நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 103 போ் பதக்கம் வென்று சாதனை

குடியாத்தத்தின் அடையாளம்தான் கெங்கையம்மன்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



