சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு எப்படி?

நாட்டில் 1960-களில் நக்சல் பிரச்னை உருவெடுத்த காலத்திலேயே முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பானது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

News image
Updated On :31 மே 2026, 11:54 am IST

நாட்டில் 1960-களில் நக்சல் பிரச்னை உருவெடுத்த காலத்திலேயே முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பானது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அந்த நேர அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.

1984-இல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1985-இல் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு நிலைகளை நிர்ணயிக்கிறது. அச்சுறுத்தல்களின் தன்மைகளைப் பொறுத்து சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.), இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என 6 வகையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

குறைந்த அளவிலான ஆபத்து உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஆயுதப் படை பாதுகாப்பில் இரண்டு ஆயுதப் படை காவலர்களே இருப்பார்கள்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.