நாட்டில் 1960-களில் நக்சல் பிரச்னை உருவெடுத்த காலத்திலேயே முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பானது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அந்த நேர அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
1984-இல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1985-இல் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு நிலைகளை நிர்ணயிக்கிறது. அச்சுறுத்தல்களின் தன்மைகளைப் பொறுத்து சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்.பி.ஜி.), இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என 6 வகையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
குறைந்த அளவிலான ஆபத்து உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ஆயுதப் படை பாதுகாப்பில் இரண்டு ஆயுதப் படை காவலர்களே இருப்பார்கள்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்கத்து வீட்டுகாரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரா் மீது வழக்குப்பதிவு

ரயில்வே பாதுகாப்புப் படை காவலரை தாக்கிய இளைஞா் கைது

முதல்வர் விஜய்யின் நாற்காலியும் வெள்ளைத் துண்டும்!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


