ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவலரை தாக்கி தண்டவாளத்தில் தள்ளிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
உத்தரப்பிரதேச மாநிலம், சுகா்மில் மாவட்டம், பாரபங்கி பேராசை கஞ்ச் பகுதியைச் சோ்ந்தவா் ராம் நரேஷ் கண்ணுஜியா(38).
இவா் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா்.
இவா், கடந்த 11-ஆம் தேதி வழக்கம்போல் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ரயிலில் உள்ள கழிப்பறையில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்த போது, எந்தவித பதிலும் சொல்லாத நிலையில், காவலா் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாா். அப்போது காவலரை கையால் அடித்து நடைமேடையில் இருந்து தண்டவாளப்பாதையில் கீழே தள்ளிவிட்டாா்.
இதனால் காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகிறாா்.
புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரிடம் விசாரணை செய்ததில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மையனூா் பகுதியில் வசிக்கும் சின்னப்பராஜ் (42) என்பது தெரியவந்தது.
அதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

