சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சிரி... சிரி...

நகைச்சுவை துணுக்குகள்.

News image
Updated On :31 மே 2026, 12:14 pm IST

மைச்சரே... மாதம் மும்மாரி பெய்கின்றதா?''

''மன்னா... மாரி மட்டும் மாதம் மும்முறை வந்து விடுகிறான், வசூல் செய்ய!''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

''அடுத்த பஸ் ஸ்டாப்பில் அதிகாரிங்க ஏறுவாங்க... எல்லோரும் டிக்கெட் எடுத்திடுங்க!''

''எங்களுக்கு நாங்க டிக்கெட் எடுத்திட்டோம்... அதிகாரிகளுக்கு நாங்க ஏன் சார் எடுக்கணும்?''

* * * *

''உங்க படத்துல நடுவுல முட்டையை ஏன் காட்டுறீங்க?''

''கதையில கரு இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுல்ல!''

-இந்து குமரப்பன், விழுப்புரம்.

''இப்போ காஸ் தட்டுப்பாடே இல்லையே...''

''ஆமாம்.''

''அப்படின்னா... டீ விலையைக் குறைக்கலாமே?''

''டீக்கடையை உங்களிடம் கொடுக்கறேன்... அப்புறம் நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க!''

* * * *

''மொய் வைக்க மறந்துட்டேன்...''

''அதனால என்ன? போய் வெச்சிட்டு வந்திடுங்க...''

''இன்னொரு முறை சாப்பிட முடியாதே!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

''உங்கள் வீட்டில் சண்டையா... பாத்திரம் உருண்ட ஓசை கேட்டுதே?''

''சண்டை இல்லை... அது கடாய் கரண்டி பறக்கும் இன்டோர் கேம் ஓசை!''

* * * *

''ரசத்தில் உப்பு அதிகம்.''

'' நான் சரியாதான் உப்பு போட்டேன்...''

''அது உன் தப்பு இல்ல... சரியா வாங்கிக்காதது ரசத்தின் தப்பு!''

* * * *

''எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது...''

''அதாவது உன்னை எவரும் புகழக் கூடாது... அப்படித்தானே?''

''ஊஹூம்... நான் எவரையும் புகழ மாட்டேன்!''

- பர்வதவர்த்தினி, பம்மல்.

'' நம்ம பேங்க்ல என்ன கலாட்டா?''

''லோன் வேணுமான்னு கேட்பதை மட்டும் லேடீசை வச்சுக் கேட்கிறீங்க... ஆனால், பணம் வசூல் பண்ண மட்டும் பவுன்சரை ஏன் அனுப்பறீங்கன்னு வாடிக்கையாளருங்க சண்டை போடுறாங்க!''

* * * *

''மனைவி சந்தோசமா இருக்க ஏதாவது வழி இருக்கா?''

''இரண்டு வழி இருக்கு... சில நேரங்களில் உங்கள் மனைவியை முடிவெடுக்க விடுங்கள்... மற்ற நேரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு சரி என்று சொல்லுங்கள்!''

* * * *

''எப்போதும் போனையே பார்க்காதீங்க ... அதுக்குப் பின்னாடியும் ஓர் உலகம் இருக்கு...''

''ஒரு லிங்க் அனுப்புங்க சார்... பார்க்கிறேன்!''

* * * *

''என்னங்க... இன்னைக்கு குழம்பு ரொம்ப நல்லா இருக்கு.''

''ஏன் சொல்ல மாட்டே... காய்கறி வெட்டிக்

கொடுத்தது நான்தானே!''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

''நோயாளிகளுக்கெல்லாம் கையில முடிக்கயிறு கட்டுறாங்களே, எதுக்கு?''

''நோயைக் கட்டுக்குள் வச்சிருக்கவாம்!''

* * * *

''வெண்பா வேண்டுமா? விருத்தப்பா பாடவா? அல்லது சந்தப்பா பாடவா, மன்னா?''

''எப்பாவாயினும் பரவாயில்லை... தப்பா பாடாமல் இருந்தால் போதும், புலவரே!''

* * * *

''மெதுவடை என்னப்பா கல்லு மாதிரி இருக்கு?''

''கல்லூர் உளுந்துல செய்தது, சார்!''

-வி.ரேவதி, தஞ்சை.