இந்தியில் முதுநிலைப்பட்டமும் - அதற்கு மேலும் படித்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். தென்னிந்திய இந்தி பிரசார சபை பல்வேறு நிலைகளுக்கான இந்தித் தேர்வுகளை ஆண்டிற்கு இருமுறை நடத்துகிறார்கள். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள், படிக்கும் காலத்திலேயே பிராத்மிக், மத்யமா, ராஸ்டிர பாஷா (பிளஸ்-2 நிலை), பிரவேசிகா, விஷாரத் (Degree level), மற்றும் பிரவீண் (M.A. level). போன்ற தேர்வுகளை படிப்படியாக எழுதி வெற்றி கொள்ளலாம். ஏதாவது ஒரு Degree வைத்திருப்பவர்கள் மட்டுமே பிரவீன் தேர்வு தேறிய பின் M.A.க்கு இணையாகக் கருதப்படுவார்கள். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள், படிக்கும் காலத்திலோ படித்து முடிந்த இரண்டு மூன்று ஆண்டுகளிலோ பிரவீண் தேறினால் மத்திய அரசில் அதிகாரிகளாக ஆவதற்கு அருமையான வாய்ப்புகள் உள்ளன. மத்திய இந்தி இயக்குநரகமும் (Central Hindi Directorate) அஞ்சல் வழியாக பல்வேறு நிலையில் உள்ள தேர்வுகள் நடத்துகிறார்கள். தமிழக இளைஞர்கள் இதன் மூலம் படித்துப் பயன் பெறலாம்'' என்றார்.