ஒரு மாணவனோ, மாணவியோ பிளஸ்-2 முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போதே தங்களது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். UPSC, SSC, TNPSC, Defence Services, Bank Officers, Clerks, Railways, Scientific Departments, Parliament of India, Intelligence Organizations, Postal Department என்று பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கல்லூரி மாணவர்கள் படிக்கும் போதே, பொழுது போக்காக அடிப்படை ஆங்கில அறிவுத்திறன், பொது அறிவுத்திறன் உள்ளிட்டவற்றை கொஞ்சம், கொஞ்சமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு உயர் அதிகாரியாக ஆக வேண்டுமென நினைக்கும் பட்சத்தில் அதற்குண்டான பத்தாண்டு கேள்வித் தாள்களையும் பொழுது போக்காகப் பார்த்து வரலாம்.