ரோட்டரி கிளப் ஆண்களுக்கு என்றால், அவர்களின் மனைவிகள் நடத்துவது "இன்னர் வீல்' இயக்கம். ஐந்து நட்சத்திர ஓட்டலில் கூடிப் பேசி, உணவருந்திவிட்டுச் செல்வார்கள் என்று மட்டுமே எண்ணிவிடக் கூடாது என்பது சமீபத்தில் இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் நடத்திய கூட்டத்தின் மூலம் தெரியவந்தது. பிரபல மகளிர் மருத்துவர் டாக்டர் கீதா அர்ஜுனும், டாக்டர் ஸ்ரீராமும் பெண்கள் உடல் நலம் குறித்துப் பேசிய போது, நூற்றுக்கு மேற்பட்ட அழைப்பாளர்கள். அவர்கள் தந்த ஆலோசனைகளைக் கேட்டார்கள். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளியூரில் உள்ளவர்களுக்காக யூடியூப் வழியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்
பட்டது.
இன்னர் வீல் இயக்கத்தின் 323-இன் திட்டங்கள் ஒருங்கிணைப்பாளர் ரேவதி ராஜா தம் இயக்கம் குறித்துப் பேசினார்:
இன்னர் வீல் என்றால் மேட்டுக்குடியினரின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்று என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் நாங்களும் அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி
வருகிறோம் என்று பலருக்கும் தெரியாது.
நீங்கள் எப்போதிலிருந்து இந்த இயக்கத்தில் இருந்து வருகிறீர்கள்?
1997லிருந்து நான் இன்னர் வீல் இயக்கத்தில் இருந்து வருகிறேன். முதலில் செயலராக இருந்தேன். பிறகு தலைவி ஆனேன். இடையே கணவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் போக வேண்டியிருந்ததால், இடையே சிறிது காலம் மட்டும் இன்னர் வீலில் இருக்கவில்லை. பின்னர் சிங்கப்பூர் இன்னர் வீல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றி வந்தேன். பிறகு சென்னை திரும்பியதும் புது வேகத்துடன் செயல்பட முடிந்தது.
சரி, இன்னர் வீல் மூலம் என்னென்ன பணிகள் செய்திருக்கிறீர்கள்?
இந்தப் பதினெட்டு வருடங்களில் இன்னர் வீல் பல துறைகளில் பாடுபட்டு வந்திருக்கிறது. முதலில் வொகேஷனல் டிரெயினிங் எனப்
படும் கைத்தொழில் பயிற்சியை, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள பார்பரா கெல்லி ஹோமில், ஏழு லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பித்தோம். தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி இதைத் துவக்கி வைத்தார். பெண்களுக்கான தையல் தொழில் பயிற்சி, சிறுமிகளுக்கான கணினி பயிற்சி முதலியவற்றை இங்கே சொல்லிக் கொடுத்தோம்.
அடித்தட்டு மக்களின் குழந்தைகள்
விமானத்தைப் பார்க்காதவர்கள்கூட இருப்பார்கள். ஆனால் அவர்களில் பலரை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டு பயணம் செய்து விட்டு வரும் அனுபவத்தைத் தந்தோம். "கனவுப்
பயணம்' என்ற அந்த நிகழ்ச்சியில் 9 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வர் விஜயராஜே சிந்தியாவும், நடிகை பானுப்ரியாவும் கலந்து கொண்டார்கள். வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அனுபவமாக இருந்தது அந்த நிகழ்ச்சி.
கன்ஸ்யூமர் அவேர்னஸ் எனப்படும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தியிருக்கிறோம். நூற்றைம்பது பெண்மணிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்குக் கூரை அமைத்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டோம். சமுதாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, மருத்துவ உதவிகள் அளித்து வருகிறோம். பார்வையற்றோர் பள்ளிக்கு பிரெயில் கருவிகள் கொடுத்து உதவியிருக்கிறோம். பெண்கள் பலருக்கு நர்சிங் பயிற்சியும் அளித்தோம்.
சமூக நலத்தில் அக்கறை கொண்ட மனோ பக்தவத்சலம், அனிதா ரத்னத்தின் தாயார் லீலா ரத்னம், கமலா ராமகிருஷ்ணன் ஆகியோர் எங்கள் இன்னர் வீல் மூலம் நிறையப் பொதுத் தொண்டு ஆற்றி வந்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: சென்னையில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!

மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்தன! கடைகளிலும், ஆன்லைனிலும் ’அவுட் ஆஃப் ஸ்டாக்’!

மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971

சைபர் குற்றங்களைத் தடுக்கும் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

