தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா!

ஃபேஷன் டிசைனிங்கிற்குப் புகழ்பெற்ற  "நிப்ட்'  கல்லூரியில் பட்டம் பெற்று  ஆடு வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்த ஸ்வேதாவின் வெற்றிக் கதை:

News image
Updated On :12 செப்டம்பர் 2018, 3:31 pm

கண்ணன்

ஃபேஷன் டிசைனிங்கிற்குப் புகழ்பெற்ற  "நிப்ட்'  கல்லூரியில் பட்டம் பெற்று  ஆடு வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்த ஸ்வேதாவின் வெற்றிக் கதை:

கடந்த 2015-இல் திருமணமாகி கணவருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்த ஸ்வேதாவின் பயணம் அப்போது தான் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு வெற்றிகரமான  ஃபேஷன் டிசைனராகத் திகழ்ந்தார். 

பின்னர், பெங்களூரில் உள்ள சுகபோகமான வாழ்க்கையைத் துறந்து, உத்தரகாண்ட்  மாநிலத்தின் டேராடூன் அருகிலுள்ள ராணிபோக்ரி என்ற சிறு கிராமத்திற்குச் சென்றார். அங்கு ஆடு வளர்ப்பு தொழிலைத் துவங்க தனது மொத்த சேமிப்பையும் முதலீடு செய்தது மட்டுமில்லாமல், தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடனையும் பெற்றார்.

வங்கிக்கடன் பெற்றுத் துவக்கத்தில் 250 ஆடுகளுடன் தொழிலை துவங்கினார். இவரது பண்ணையில் ஜம்னாபாரி -டோடாபாரி முதல் சிரோகி- பர்பாரி வரை நாட்டு ஆடு ரகங்கள் மட்டுமே உள்ளன.

ஆடுகளுக்கு முறையான பாதுகாப்பும், ஊட்டச்சத்தும் கிடைப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார் ஸ்வேதா. சில நேரங்களில் அவரே ஆடுகளைச் சந்தைகளுக்குக் கூட்டிச் செல்கிறார். பாரம்பரிய சந்தையுடன் சேர்த்து, இணையதளங்களில் கூட  ஆடுகளை விற்கிறார்.

முதல் வருடமே அசத்தல்.  கடந்த ஆண்டு ஸ்வேதா ரூ.25 லட்சம் விற்றுமுதலாகப் பெற்றார். மேலும் மற்றவர்கள் சொந்தத் தொழில் துவங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் தனது பண்ணையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்த துவங்கி எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்வேதா. 

இவர், ""செய்யும் தொழிலே தெய்வம்' என்ற முன்னோர் வாக்கிற்கிணங்கச் செய்யும் தொழிலை விரும்பிச் செய்தால் வாழ்வின் உயரங்களை அடைய முடியும்''  என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.