மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள்!

குங்குமப்பூவை  பாலில்  அரைத்துப் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள்!

* குங்குமப்பூவை  பாலில்  அரைத்துப் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
* ஆவாரம் பூ  பொடியை  நீரில்  கலந்து  குடித்து வர நீரிழிவு  நோய் குணமாகும்.
* ஜாதிமல்லி  பூக்களை  அரைத்து தேமல்  மேல் பூசி வர  குணமாகும்.
* மருதாணிப் பூக்களை  தலையணையில்  நிரப்பி  வைத்துக் கொள்ள  நன்கு தூக்கம் வரும்.
 * செண்பகப் பூவை  நீரிலிட்டு  காய்ச்சி அருந்திவர வயிற்று  வலி மாறும்.
* வெள்ளை  அல்லிப் பூக்களை  அரைத்து  புண்கள்  மேல் பற்றிட  புண்கள்  ஆறும்.
* ரோஜா  இதழ்களை  நீரில்  ஊற வைத்து  தேன் சேர்த்து  சாப்பிட  வயிற்று வலி நீங்கும்.
* பாரிஜாத  மலர்  ஊறிய  நீரால்  முகத்தைக் கழுவ  கண் வீக்கம் , சூடு நீங்கும்.
* சங்கு புஷ்பம்  குடிநீர்  மலச்சிக்கலை  குணப்படுத்தும். 
* செம்பருத்தி  பூக்களை நீரிலிட்டு  காய்ச்சி  குடிக்க உடல் சூடு  தணியும்.
* மல்லிகைப் பூக்களை  ஊற வைத்த நீரால்  கண்களைக்  கழுவி வர கண்  சூடு மாறும்.
*  வெங்காயப்  பூவை  சமைத்து உண்ண  உடல் வெப்பம்  சம நிலையாகும்.

 (மலர்களின்  மகத்துவம் என்ற  நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com