அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குறைந்த முதலீட்டில் லாபம்!

"வீட்டில் இருக்கும் பெண்கள் காலை முதல் மாலை வரை ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள்.

News image
Updated On :25 நவம்பர் 2020, 12:30 am

ரிஷி


"வீட்டில் இருக்கும் பெண்கள் காலை முதல் மாலை வரை ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்களது வேலைகளை திட்டமிட்டு முடித்துவிட்டு ஓய்வு நேரத்தை உருவாக்கிக் கொண்டுதங்களுக்கென்று ஏதேனும் ஒரு வேலையை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ். அந்த வகையில் மூலிகை டீ எப்படி தயாரித்து கைத் தொழிலாக்கிக் கொள்ளலாம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

முருங்கைக் கீரை டீ

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை, சீரகம்.

முருங்கைக் கீரையை நன்கு அலசி மிக்ஸியிலிட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். பொடித்த கீரையின் அளவுக்கு சரிபாதியாக சீரகத்தை கலந்து வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை அரவை மிஷினில் கொடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை டீ பேக்காக தயார் செய்து கொள்ள வேண்டும். இதனை தினமும் காலை வேளைகளில் சுடு தண்ணீரில் போட்டு குடித்து வர, பிரஷர் குறைந்துவிடும்.

முருங்கை மரம் வைத்திருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம். மரம் இல்லாதவர்கள், முருங்கை மரம் வைத்திருப்பவர்களிடம் நேரடியாக குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அருகம்புல் டீ:

தேவையான பொருட்கள்: அருகம்புல் - 1 கைப்பிடி, மிளகு - 4, 1 சிட்டிகை - சீரகம் இதுதான் அளவு.

அருகம்புல்லை வாங்கி வந்து சுத்தம் செய்து நன்கு காய வைத்து பின்னர் அரைத்து டீ பேக் செய்து கொள்ளவும். இதற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அருகம்புல் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

இதுபோன்றே செம்பருத்தி, ஆவாரம் பூ, சங்கு பூ போன்ற மூலிகைகளிலும் செய்து கொள்ளலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் இந்த மூலிகை டீ பேக்கை தயாரித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து அதன் தரத்தை ஆய்வு செய்து பின்னர், உணவு பொருள்களுக்கான மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து விற்பனையை தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் கனிசமான லாபம் தரும் நல்ல கைத்தொழில் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.